பதிவு செய்த நாள்
01
ஆக
2015
01:08
புதுச்சேரி: காளத்தீஸ்வரர்-வரதராஜப் பெருமாள் கோவில் பவித்ரோத்சவத்தை முன்னிட்டு, சிறப்பு கலசாபிஷேகம் நேற்று நடந்தது.புதுச்சேரி ஆயிர வைசிய மரபினர்களுக்கு சொந்தமான, காளத்தீஸ்வரர்-வரதராஜப் பெருமாள் கோவிலில், 12ம் ஆண்டு, பவித்ரோத்சவம், கடந்த 29ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து, 30ம் தேதி காலை 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, பவித்ர சமர்ப்பணம், தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு, முன்றாம் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு, மகாபிஷேகம், பகல் 12:00 மணிக்கு, ஞானம்பிகா சமேத காளத்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு கலசாபிஷேகம் நடந்தது.இரவு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. இன்று (1ம் தேதி) காலை 5:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.