உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும் வாரி வழங்கிய தஞ்சை மண்டலத்தில் காவிரி பாய்ந்தோடுகிறது. காவிரிக்கரையை அரசாண்ட மன்னர்களே சோழர்கள். இவர்கள் கி.மு., இரண்டாம் நுõற்றாண்டிலிருந்து கி.பி., 13ம் நுõற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களின் ஆட்சிச் சிறப்பைச் சங்ககாலத்தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. பெருக்கெடுத்து ஓடிய காவிரியின் குறுக்கே கல்லணை கட்டியவன் கரிகால்சோழன். இவன் கி.பி., முதலாம் நுõற்றாண்டில் ஆட்சி புரிந்தான். கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச் சிற்றரசனிடம் போரிட்ட பரகேசரி விஜயாலய சோழன் 90 விழுப்புண்களை பெற்றான்.இவன் தஞ்சாவூரைக் கைப்பற்றி, தனது தலைநகராகக் கொண்டு, தஞ்சைச் சோழப் பரம்பரையைத் தோற்றுவித்தான்.பிற்காலச் சோழமன்னர்களின் பரம்பரையில் தோன்றியவர் ராஜராஜசோழன். சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். ராஜகேசரி உள்ளிட்ட 42 சிறப்புப்பெயர்களைப் பெற்றார்.