காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். இந்நாளில் சமயபுரம் பகுதி விழா கோலமாக இருக்கும். இங்கு சகோதரர்கள் தங்கள்சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு அழைத்து சீர்கொடுப்பர். இளம் தம்பதியர் இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கு செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். சாதாரண மக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்குதிருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே வீற்றிருப்பார். சீதனப் பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.