தட்சிணாயன புண்ணிய காலமான ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி துவங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்று பழமொழி உண்டு. நாடு செழிக்க நதிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளை முன்னோர்கள் கொண்டாடினர். இந்நாளில் விவசாயப் பணிகளைத் துவக்கினால் விளைச்சல் பல மடங்காக இருக்கும் என்பது நம்பிக்கை.அன்று தொடங்கும் புதிய முயற்சிகள் இனிதே நிறைவேறும். பக்தர்கள் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலரை காவிரியில் மிதக்க விடுவர். புதிதாக திருமணமானவர்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். இதனை தாலி பெருக்குதல் என்று பெயர். இந்நாளில் வீட்டுத் தோட்டத்தில் கொடிகளான அவரை, பீர்க்கு, புடலை போன்றவற்றிக்கு விதை இடுவர். நகை, பொருட்கள் வாங்கவும் இது நல்லநாள்.