அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் ராமபிரான் வழி கேட்டார். ராமா! 66 கோடி தீர்த்தங்களைத் தன்னகத்தே கொண்ட நதி காவிரி. தட்சிண (தென்னக) கங்கை என்ற சிறப்பு பெயர் கொண்டது. அந்நதியில் நீராடினால் பாவம் அனைத்தும் நீங்கும் என்றார் வசிஷ்டர். அதன்படி ராமரும் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்பது செவிவழிச் செய்தி.