காவிரிக் கரையிலுள்ள சிவத்தலம் திருமங்கலக்குடி. இங்குள்ள மங்களாம்பிகை தன்னை வழிபடும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைதருபவளாக இருக்கிறாள். இதற்காக அம்பிகையின் கையில் சாத்திய மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். இங்குள்ள காவிரி நதியை மங்களதீர்த்தம் என்கின்றனர்.ஆடிப்பெருக்கு அன்று மங்களாம்பிகைக்கும், சிவன் சன்னிதியிலுள்ள காவிரி அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமைஅன்று அம்மனை தரிசித்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட விரைவில் திருமண யோகம் உண்டாகும். மங்கள விநாயகர், மங்கள தீர்த்தம், மங்களாம்பிகை, மங்கள விமானம், மங்கலக்குடி என ஐந்து மங்களம் இருப்பதால் பஞ்ச மங்கள க்ஷேத்திரம் என இத்தலத்திற்கு சிறப்புப் பெயருண்டு. 11ம் நுõற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ., துõரத்தில் ஆடுதுறை. அங்கிருந்து 3கி.மீ., துõரத்தில் திருமங்கலக்குடி உள்ளது. தொலைபேசி: 0435 - 247 0480.