இப்படி இருந்து விட்டேனே என்று வருந்த வேண்டாம். எப்படி இருந்த நான் இப்படி மாறிவிட்டேனே என்று நீங்களே சொல்லுமளவு, உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். அந்த மாற்றமே உங்களுக்குள் ஆனந்தத்தை வரவழைக்கும். விடாமுயற்சி உன்னிடம் இருந்து விட்டால், பாறாங்கல் போன்ற தடையும் கூட தகர்ந்து துõள் துõளாக நொறுங்கி விடும்.மனிதனின் தகுதி அறிந்தே கடவுள் அருள்புரிகிறார். அவரது அருளுக்குத் தகுதிப்படுத்திக் கொள்வது நமது பொறுப்பு. மனம் ஒரு கண்ணாடி. அதன் மீது தீய எண்ணம் என்னும் துõசி படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.கடவுளை முழுமையாக நம்பினால், நேர்மையான சூழலை அவரே அமைத்துக் கொடுத்து துணைபுரிவார்.நேற்றைய சுமையை இன்று சுமக்காதே.தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கான முயற்சியில் உடனே இறங்கு. உண்மை இருக்கும் இடத்திலேயே கடவுள் இருப்பார். சத்தியம் தவறாத உத்தமர்களுக்கே கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும். நேர்மை, நீதி, நியாயம், அடக்கம், வீரம் போன்ற நற்குணங்களின் எடுத்துக்காட்டாக மனிதன் மாற வேண்டும். அப்போது வெற்றி ஒருவன் பக்கத்தில் காத்திருக்கும். புதுமலர் போல மனம் திறந்த நிலையில் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதில் எப்போதும் சமத்துவம், கருணை வெளிப்பட வேண்டும். மலருக்குரிய நறுமணம், அழகு, வெளிப்படையான தன்மைகளை மனிதன் பெற்று விட்டால் உலகமே மகிழ்ச்சிக் கடலில் திளைக்கும்.அமைதி உள்ளத்தில் இருக்குமானால், எந்தப் பணியையும் சிறப்பாகச் செய்ய முடியும். ஆர்வமுடன் பணியாற்றினால் மன வலிமையும் அதிகரிக்கும்.பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். உன்னைக் கேட்காத சமயத்தில் கூட அபிப்ராயம் சொல்லும் பழக்கத்தை கை விட்டு விடு.பிரார்த்தனையோடு நம்பிக்கை, நேர்மை ஆகியவையும் சேர்ந்து விட்டால், ஒருவன் கேட்பதைக் கடவுளால் கொடுக்காமல் இருக்க முடியாது. வாழ்வின் உண்மையான நோக்கம் கடவுளுக்காக வாழ்தல். அதாவது உண்மைக்காக வாழ்வது தான். எத்தனை எதிர்ப்பு குறுக்கிட்டாலும், கடவுளின் அருள் இருந்தால் அவை தகர்ந்து நாம் நினைப்பது நடந்து விடும். (மகான் ஸ்ரீஅன்னை)