தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2015 11:08
தாடிக்கொம்பு:சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. தெப்ப உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.