திருத்தணி: கன்னியம்மன் கோவிலில், நேற்று, தீமிதி திருவிழா நடைபெற்றது.திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் இருளர் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, தீமிதி திருவிழா, கடந்த மாதம், 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர். தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.