பதிவு செய்த நாள்
03
ஆக
2015
11:08
வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை கீழ்த்தெரு மூலஸ்தம்மன் கோவிலில், இன்று, ஆடி திருவிழா, கோலாகலமாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமம் கீழ் தெருவில், மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாதம் மூன்றாவது வாரத்தில், மூன்று நாள் ஆடி திருவிழா, தொடர்ந்து, ௧௪ ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிற்கான, ஆடி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், கசத்து மேடு பகுதியில், அம்மன் மலர் அலங்காரத்தில் ஊர்வலம் வந்தார். இதையடுத்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாவது நாளான நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. மூன்றாவது நாளான இன்று, காலை 10:00 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு பூ ஜையும்; பகல் 2:00 மணியளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும்; இரவு 8:00 மணியளவில், மூலஸ்தம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும்; இரவு 10:00 மணியளவில் சிறப்பு வாணவேடிக்கையும் நடைபெற உள்ளன. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, முத்தியால்÷ பட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் செய்துள்ளனர்.