ராமநாதபுரம்: ஆடி பெருக்கை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ராமநாதபுரம் சிவன் கோயில், மாரியம்மன் கோயில் தெரு மாரியம்மன், வெட்டுடையாள் காளியம்மன், சேதுபதி நகர் மல்லம்மாள் காளியம்மன், வாலாந்தரவை வாழவந்த அம்மன், நாகாச்சி உஜ்ஜையினி அம்மன், சுந்தரமுடையான் தில்லைநாச்சியம்மன், மண்டபம் முகாம் வழிவிடு மாரியம்மன், பூந்தோன்றி காளியம்மன், மண்டபம் அம்பலகாரத்தெரு கூனி மாரியம்மன், ஓடைத்தோப்பு சந்தன பூமாரியம்மன் உள்பட 50க்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பெண்கள், புதுமண தம்பதிகள் பங்கேற்றனர்.