Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் ஆடி செவ்வாய் வழிபாடு! மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!
எழுத்தின் அளவு:
மஹாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு!

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
05:08

லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அருகே மேட்டு மகாதானபுரம் மஹாலட்சுமி கோவில் விழாவில், ஆடிப்பெருக்கு பண்டிகைக்கு மறு நாளான இன்று, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிப்பட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மஹாலட்சுமி கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். ஆடி, 18க்கு மறுநாள், திருவிழாவின் போது பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது முக்கிய நிகழ்வாக உள்ளது. முன்னதாக, ஆடி மாதம் பிறந்தவுடன், பக்தர்கள் காவிரியில் நீராடி, மஹாலட்சுமி கோவிலுக்குச் சென்று காப்பு மற்றும் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம்.

ஆடிப்பெருக்கு பண்டிகைக்கு மறுநாளான இன்று, முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 7 மணி முதல் மஹாலட்சுமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. காலை, 7.45 மணி முதல் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்து கோவில் வளாகத்தில் வரிசையில் உட்கார வைத்தனர். காலை, 9.03 மணிக்கு கருடன் வட்டமிட்டு காட்சியளித்தால், பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். காலை, 9.10 மணிக்கு, கோவில் பரம்பரை பூசாரி பெரியசாமி, ஆணி காலணி அணிந்து பூஜை நடத்தினார். பின், கோவில் கொடிமரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது. காலை, 9.15 மணிக்கு சப்த கன்னிமார்களை குறிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த, 24 மனை தெலுங்கு செட்டியார், ஏழு பேர், குரும்பக்கவுண்டர் ஏழு பேர் தலையில், முதலில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பிறகு, கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்த்திருந்த, 20 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் தலையில் பூசாரி பெரியசாமி தேங்காய் உடைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar