பதிவு செய்த நாள்
05
ஆக
2015
10:08
தர்மபுரி: தர்மபுரி, கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், ஆடி மூன்றாம் செவ்வாய் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு, கோட்டை முனியப்பன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், 10.30 மணிக்கு மேல், 12 மணிக்குள் பாலாபிஷேகம், மஹா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. மாலை, 3.45 மணிக்கு, ராஜ துர்காம்பிகை சுயரூப காட்சியும், மாலை, 6 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும், இரவு, 8 மணிக்கு ராஜ துர்காம்பிகைக்கு மஹா அபிஷேகமும், 11 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது. ஏற்பாடுகளை குருக்கள் செல்வ முத்துகுமாரசாமி, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்தனர்.