சோனை சுவாமி கோயிலில் வாய் கட்டி பொங்கல் வைக்கும் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2015 10:08
மேலுார் : மேலுார் அருகே மேலவளவு சோனை சுவாமி கோயிலில் ஆடி படையல் விழாவையொட்டி ஆண்கள் கிடா வெட்டியும், பெண்கள் வாயில் துணி கட்டி பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி ஆடி 15 ல் சாமியாடிகள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 15 கி.மீ., துாரத்திலுள்ள அழகர் கோவிலுக்கு நடந்து சென்று தீர்த்தமாடினர். அன்று முதல் எண்ணெய் தாளிதம் இல்லாமலும், மது, மாமிசம் சாப்பிடாமலும் விரதமிருந்தனர்.முக்கிய நிகழ்வாக நேற்று காலை மேலவளவில் உள்ள கோயில் வீட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். பெண்கள் அருகில் உள்ள சோமகிரி குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர, கோயிலில் கிடாவெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் வைத்த பெண்கள் வாயை துணியால் கட்டி கடும் விரதத்துடன் சமையல் செய்தனர். 13 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விழா நடந்தது.