பதிவு செய்த நாள்
05
ஆக
2015
10:08
திருத்தணி: திருத்தணி நகராட்சியில், நேற்று ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், பூ கரகம், உற்சவர் கங்கையம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி நகராட்சியில் உள்ள, தணிகை மீனாட்சி அம்மன் கோவில், மேட்டுத் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவில், அக்கைய்யா நாயுடு தெருவில் உள்ள தணிகாசலம்மன் கோவில், சுப்ரமணிய நகரில் உள்ள துர்க்கையம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள அம்மன் கோவில்களில், ஜாத்திரை விழாவை முன்னிட்டு, காலையில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு திருத்தணி புறவழிச் சாலையில் இருந்து, பூ கரகம் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தது. இரவு 7:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா வந்தது.