நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கொடியேற்றப்பட்டது. தினமும் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. 28ம் தேதி மதியம் 3:00 மணிக்கு சாகை வார்த்தலும், 30ம் தேதி காலை 9:00 மணிக்கு பட்டு சாத்தும் வைபவமும், அம்மன் வீதியுலாவும் நடந்தது. இரவு 11:00 மணிக்கு பூஷ்ப பல்லாக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. 31ம் ÷ ததி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து; 9:00 மணி முதல் செடல் திருவிழா நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.