விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்தது. விழாவையொட்டி நன்னாடு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று மாலை 3:00 மணிக்கு காளிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 5:00 மணிக்கு காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.