விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கண்டமானடி ஜலதர மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்தது. கண்டமானடி கிராமத்தில் அமைந்துள்ள ஜலதர மாரியம்மன் கோவிலில் கடந்த 29ம் தேதி ஆடி மாத திருவிழா துவங்கியது. இங்குள்ள ஜலதர மாரியம்மன், எல்லை பிடாரியம்மன், அய்ய னாரப்பன், கெங்கையம்மன் சுவாமிகளுக்கு காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இரவு 10:00 மணிக்கு எல்லை பி டாரியம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 30ம் தேதி அய்யனாரப்பன், கெங்கையம்மன் சுவாமிகள் வீதியுலா நடந்தது. தொடர்ந்து கடந்த 31ம் தேதி மதியம் 2:30 மணிக்கு மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. இரவு 10:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மறுநாள் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.