Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டைக் கருப்பர் பாமாலை திருப்புத்தூர் கருப்பண்ணன்
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
கோட்டைக் கருப்பர் சமயமாலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
02:08

விநாயகர் வணக்கம்

கருப்பருக்கும் கோவிலுக்கும் காவலனாய்ப் பின்புறத்தில்
விருப்புடைய தம்பியுடன் வீற்றிருக்கும் விநாயகனே!
திருப்புத்தூர் எல்லையிலே திகழ்கோட்டைக் காவலனாம்
கருப்பரையாம் வரவேற்கக் காப்பாக எழுவாயே!    (1)

சமயமாலை

வானோங்கு கோவிலிலே வளர்ந்தோங்கு திருத்தளியார்
மீனோங்கு திருக்குளத்தில் மேலோங்கு தாமரைபோல்
தேனோங்கு திருவருளைத் தினம்பொழியும் கருப்பண்ணனே!
ஊனோங்கக் கூவுகிறோம் உதித்திடுவாய் இதுசமயம். (2)

அண்ணாந்த இருபுரவி ஆகாயத் திசைநோக்கி
எந்நாளும் பாய்ந்தபடி எழுந்திருக்கும் கோவிலிலே
கண்ணாக வீற்றிருந்து கருவிருக்கும் சிசுக்களையும்
எந்நாளும் காப்பவனே! எழுவாய் இதுசமயம். (3)

திருத்தளியார் நடுவிருக்கும் திருப்புத்தூர் நன்னகரைத்
கருத்தாக இரவுபகல் காவலிடும் நால்வரிலே
உருத்தெழுந்து கீழ்த்திசையில் உதிக்கின்ற சூரியன்போல்
பொறுப்பேற்ற கருப்பண்ணனே! புறப்படுவாய் இதுசமயம். (4)

நால்புறமும் சூழ்கோட்டை நன்னகரைக் காவலிடும்
பால்பொழியும் பூமாயி பார்த்திருப்பார் தென்திசையை
வால் அனுமார் மேற்காவார் வடக்கிருப்பாள் அங்காளி
கீழ்புறத்தைக் காப்பவனே கிளம்பிடுவாய் இதுசமயம் (5)

கண்ணசைத்தால் முன்னோடக் காத்திருக்கும் சங்கிலியான்
முன்னாலே வலப்புறத்து மூலையிலே வீற்றிருக்க
என்ன குறைஎன்றே இருவிழியால் கேட்டருளும்
மன்னவனே! குலம்காக்க வருவாய் இதுசமயம். (6)

காளியம்மன் ராக்காயி காப்பாற்றும் பேச்சியம்மா
தோழியராய் அருகிருக்கத் தோகைமயில் பின்னிருக்க
வாளிரண்டு முன்னிருக்க பாதரட்சை உடனிருக்க
வாழியென வணங்குகிறோம் வருவாய் இதுசமயம். (7)

அரிய திருப்பணியும் அன்றாடப் பூசைகளும்
உரிய முறையில் உனக்காகச் செய்தவர்கள்
பிரியமுடன் உன்னருகே பிரியாமல் உடனிருக்க
உரியவழி செய்தவனே! உதிப்பாய் இதுசமயம். (8)

வடுகநாதர் ராயப்பர் பண்டாரம் வலப்புறமாம்
நடுவே பெரியவர்கள் நகரத்தார் பாட்டய்யா
அடுத்திருப்பார் நாயக்கர் அவரருகே கருப்பாயி
எடுத்தளிக்கும் கருப்பையா! எழுவாய் இதுசமயம் (9)

சந்நியாசி சர்ப்பமுடன் சார்ந்துன்றன் பின்னருக்க
முன்னோடச் சங்கிலியான் முழங்காலை மடித்திருக்கச்
சின்னவரும் முத்துடனே சேர்ந்துன்றன் உடனிருக்க
எந்நாளும் குலம்காக்க எழுவாய் இதுசமயம்.     (10)

மடமருகே கட்டிவைத்தோம் மடிகட்டித் தெண்டனிட்டோம்
படமெழுதி மனம்பதித்தோம் பலிகொடுத்துப் பூசையிட்டோம்
அடம்பிடிக்கும் பிள்ளைகளாய் அருள்வேண்டிக் கதறுகிறோம்
வடம்பிடிக்கும் தேர்போல வருவாய் இதுசமயம்.     (11)

கார்வளரும் நிறத்தானே! கதிர்வளரும் முகத்தானே
சீர்வளரும் எலுமிச்சை சிவந்த விழியானே!
தேர்வளரும் திருப்புத்தூர்த் திகழ்கோட்டைக் கருப்பண்ணனே!
பார் வளர வணங்குகிறோம் வருவாய் இதுசமயம் (12)

கோடானு கோடிமனு கொண்டாடும் கருப்பண்ணனே!
வாடாத அன்பென்றும் வளர்மலை அணிபவனே!
பாடாத பாட்டெல்லாம் பாடியுனை அழைக்கின்றோம்
ஆடாது இருப்பதுவே அருள்வாய் இதுசமயம். (13)

வாழையடி வாழையென வளரும் தலைமுறைகள்
ஆளாக்கிக் காப்பவனே! அய்யா! கருப்பய்யா!
காளையர்கள் வேலைபெறக் கன்னியர்கள் மாலைபெற
வேளைவர வேண்டுகிறோம் விரைவாய் இதுசமயம். (14)

நாளுக்கு நாள் வளரும் நலங்கள் செழித்தோங்க
ஆளுக்கு ஒருகுறையை அவரவரும் நெஞ்சேந்திக்
காலுக்கு பூசையிட்டுக் கதறுகிறோம் கருப்பய்யா!
பாலுக்கு சீனியென வருவாய் இதுசமயம். (15)

தஞ்சமென வந்தவரைத் தாய்போல் காப்பவனே
அஞ்சலெனக் கைகாட்டி ஆதரிக்கும் கருப்பண்ணனே!
கெஞ்சுகிறோம் கதறுகிறோம் வந்திடுவாய் கருப்பண்ணனே!
மஞ்சாகக் கீழிறங்கி வருவாய் இதுசமயம். (16)

எங்கே இருந்தாலும் எப்போ தழைத்தாலும்
அங்கே எழுந்தோடி ஆதரிக்க வருபவனே!
சிங்க முகத்தில் சிலிர்க்கின்ற மீசையுடன்
இங்கே அழைக்கின்றோம் எழுவாய் இதுசமயம். (17)

நெடுமாலின் வரத்தாலே நிலம்காக்க வந்தவனே!
அடுபகையால் வருந்தாமல் ஆதரிக்கும் தாயகமே
கொடுவாளைக் கையேந்திக் குலம்காக்கும் கருப்பண்ணனே!
இடியோசைக் குரலெழுப்பி வருவாய் இதுசமயம். (18)

தாய்போலக் காப்பவனே! தமிழ்போல இனிப்பவனே!
சேய்மார்கள் கூறுகுறை செவிசாய்த்துக் கேட்பவனே!
கோவில்நிலைதாண்டி குதிரைகளின் மேலேறி
வாய்மணக்கக் கூவுகிறோம் வருவாய் இதுசமயம்.   (19)

சொன்னவழி மறந்தாலும் சுருக்குவழி சென்றாலும்
என்னபிழை செய்தாலும் எண்ணாமல் மறந்தாலும்
கண்ணை இமை காப்பதுபோல் கன்றுபசு சுரப்பதுபோல்
எந்நாளும் எமைக்காக்க எழுவாய் இதுசமயம். (20)

எண்ணம் அறிந்தே எழுந்துவரும் நாயகனே!
என்ன கருப்பா எழுந்துவரத் தாமதமேன்?
வண்ணத் தமிழ்மாலை மலரடியில் சூட்டுகிறோம்
மன்னவனே! கருப்பையா! வருவாய் இதுசமயம். (21)

நீட்டுகுலைத் தென்னைமரம் நிதம்வணங்கும் ஊருடையாய்
கோட்டைக் கருப்பய்யா! குலம்காக்கும் தெய்வதமே!
பாட்டரசி கவிக்குலையால் பாடியுனை வணங்குகிறோம்
வாட்டத்தைப் போக்கிடவே வருவாய் இதுசமயம் (22)

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple news
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமேசங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple news
காப்புகார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்பார்மேவு வடிவுடையாள் ... மேலும்
 
temple news
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்டஅருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple news
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்டஅயல்நிற்கும் தென்னையெலாம் ... மேலும்
 
temple news
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கைதரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்துஉமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar