திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பின்போது மணமகன் பேண்ட், சட்டை அணிவார். ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவர் ரங்கமன்னாருக்கும் இதே போல பேண்ட், சட்டை அணிந்து அலங்காரம் செய்யப்படுகிறது. ஏகாதசி, அமாவாசை, தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் மட்டுமே இவருக்கு வேட்டி அணிவிக்கப்படும். அந்நாட்கள் விரத நாட்கள் என்பதால் இப்படி செய்கிறார்கள்.