ஐதராபாத்தில் சில ஆண்டுகளுக்கு முன் கொடிய சம்பவம் நிகழ்ந்தது. மதுவுக்கு அடிமையான மூவர், இரண்டு பெண்கள் உட்பட 9 பேரைக் கொலை செய்துள்ளனர். ஒருநாள் இவர்களுக்கு குடிக்க பணம் குறைந்தது. அப்போது, ஒரு பெண் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பணத்தைக் கேட்டனர். பாவப்பட்ட அந்தப்பெண் அவர்களுடன் போராடியிருக்கிறாள். அந்தப் போராட்டத்தில் அவளைக் குத்திக் கொன்று பணத்தை எடுத்தனர். ஆனால், அவரிடம் இருந்தது எவ்வளவு தெரியுமா? வெறும் மூன்றே ரூபாய். மது குடிப்பதற்காக ஆறு நாட்களில் ஏழு பேரைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். கொல்லப்பட்ட எல்லாருமே ஏழைகள். இந்தக் கொள்ளையில் இவர்களுக்கு அதிகபட்சமாக கிடைத்த தொகையே வெறும் 600 ரூபாய் தான். போதைப் பழக்கம் அவர்களை இந்த அளவுக்கு தள்ளியிருக்கிறது.மது அருந்துவதை பைபிள் வன்மையாகக் கண்டிக்கிறது.திராட்சை ரசம் பரியாசம் செய்யும். மதுபானம் அமளி பண்ணும். அதினால் மயங்குகிற எவனும் ஞானவானல்ல என்ற வசனம் இருக்கிறது. இந்த வசனத்தை அடிக்கடி படியுங்கள். குடியை விட்டு விடுங்கள். மது என்ற வஸ்து குடிப்பவனின் குடியை மட்டுமல்ல, அடுத்தவர்களின் குடியையும் சேர்த்து அழித்து விடும்.