ஆண்டாள் சன்னிதிக்கு எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி உள்ளது. கண்ணாடியை அக்காலத்தில் தட்டொளி என்றனர். இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்துக் கொண்டாள். தற்போது பளபளப்பு குறைந்துள்ள இந்த கண்ணாடியைத் தான், ஆண்டாள் திருப்பாவையில், உக்கமும் (விசிறி) தட்டொளியும் என்று குறிப்பிட்டிருக்கிறாள்.