பதிவு செய்த நாள்
17
ஆக
2015
03:08
செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
குரு, ராகு நன்மை தர இருக்கின்றனர். சுக்கிரன் தற்போது 5 ல் இருந்து நன்மை தருவதோடு, ஆக. 24ல் வக்ரம் அடைந்து கடக ராசிக்கு சென்றாலும் நற்பலன் கொடுப்பார். புதன் தற்போது 5 ல் இருந்து சிரமம் கொடுத்தாலும், ஆக. 21ல் கன்னி ராசிக்கு சென்ற பின் சிரமம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படலாம். கணவன், மனைவியிடையே மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. எதிரி தொல்லை இருக்கும். புதிய முயற்சியில் சுமாரான பலன் கிடைக்கும். அதிக முதலீடு தற்போது தேவையில்லை. ஆக. 21க்கு பிறகு கூடுதல் வளர்ச்சியும் பணவரவும் இருக்கும்.
பணியாளர்கள் சிறப்பான பலன் காணலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆக. 21க்கு பிறகு பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பொருளாதார வளத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் உழைப்பிற்கு ஏற்ற பலன் பெற முடியாமல் போகலாம்.
மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவர். மாத மத்தியில் புதனால் நன்மை கிடைக்கப் பெறலாம். போட்டிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது அரிது.
விவசாயிகள் சுமாரான வருமானம் காண்பர். பயறு வகைகள், பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளி போகும்.
பெண்கள் கூடுதல் பலன் காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். புத்தாடை ஆபரணம் வாங்க வா#ப்புண்டு. செவ்வாயால் உடல் நலம் பாதிப்பு வரலாம். பயணத்தின் போதுகவனம் தேவை.
நல்ல நாள்: ஆக. 20, 21, 22, 27, 28, 29, 30, செப். 2, 3, 4, 7, 8,16, 17
கவன நாள்: ஆக. 23,24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: மஞ்சள் , நீலம்
பரிகாரம்: முருகன், விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.