பதிவு செய்த நாள்
17
ஆக
2015
03:08
செவ்வாயை நட்பு கிரகமாக கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
கடந்த மாதம் செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருந்ததால் பொருள் இழப்பு, பகைவர் வகையில் தொல்லை, அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு இருந்திருக்கும். இம்மாதம் அவர் உங்களுக்கு சாதகமாக 3ம் இடத்துக்கு திரும்புகிறார். இதனால் பக்தி உயர்வு மேம்படும். முயற்சியில் வெற்றி @மல் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். மேலும் சுக்கிரன், கேது மாதம் முழுவதும் நன்மைகளை தருவர். புதன் தற்போது 4-ம் இடத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார்.அவர் ஆக. 21ல் கன்னி ராசிக்கு செல்வது சிறப்பானது அல்ல. ஆனால், செப். 16ல் வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு செல்வதால் நற்பலனை தருவார். பணப் புழக்கம் ஓரளவு இருக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். செப். 5,6ல் எதிர்பாராத பணவரவு இருக்கும்.
பணியாளர்களுக்கு திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை இல்லை.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெறலாம்.
மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக அமையும்.
விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபத்தை காண முடியும். புதிய சொத்து வாங்கும்
எண்ணம் கைகூடும்.
பெண்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பை பெறுவர். நகை, புத்தாடை வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நல்ல நாள்: ஆக. 23, 24, 29, 30, 31 செப்.1, 5, 6, 9, 10.
கவன நாள்: ஆக. 25, 26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 9 நிறம்: வெள்ளை, சிவப்பு.
பரிகாரம்: விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை சனீஸ்வரரை வணங்கி ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்