இந்த மாதம் மத்தியில் அதிக பலனைக் காணலாம். ஆக. 21 முதல் செப். 16 வரை நன்மை தருவார். சனி, சூரியன், சுக்கிரன் ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை கொடுப்பர். பொருளாதார வளம் சிறக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெல்லும் திறமை உண்டாகும். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடை, அணிகலன் கிடைக்கலாம். விருந்து, விழா சென்று வருவீர்கள். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செப். 7,8 ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பணியாளர்கள் சிறப்பான பலன் பெறுவர். பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கை எளிதில் நிறைவேறும்.
கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறலாம். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆக. 24 க்கு பிறகு சமுக மதிப்பு கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்.பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம்.