பதிவு செய்த நாள்
17
ஆக
2015
03:08
சூரியனை ஆட்சி நாயகனாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டாகும். ஆக. 24ல் சுக்கிரன் வக்ரமாகி சாதகமற்ற நிலை பெறுகிறார். மற்ற கிரகங்களால் சுமாரான பலனே கிடைக்கும். எதையும் விழிப்புடன் செய்ய வேண்டியதிருக்கும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என செல்வீர்கள். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீட்டில் பிரச்னை உருவாகலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. ஆக. 21க்குப் பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத்தேவை அனைத்தும் பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். திடீர் இட மாற்றத்தைச் சந்திக்க நேரிடும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறாமல் போகலாம். அதே நேரம் உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். செப். 5,6 ல் எதிர்பாராத நன்மை உருவாகும்.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பகைவரால் தொல்லை அதிகரிக்கும். செப். 11,12,13 ல் பெண்களால் நன்மை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு எதிர்பாராத நன்மை உண்டாகும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். புகழ், பாராட்டு காண்பர். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் உயரும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.
விவசாயிகள் உழைப்புக்கு தகுந்த பலன் காண்பர். கால்நடைச் செல்வம் பெருகும். வழக்கு விவகாரத்தில்
மெத்தனம் வேண்டாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவர்.
நல்ல நாள்: ஆக. 20, 21, 22, 29, 30, செப். 5, 6, 7, 8, 11, 12, 13, 16, 17
கவன நாள்: ஆக.31, செப்.1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். சிவன் கோவிக்கு செல்லத் தவறாதீர்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.