கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) வாகன யோகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2015 03:08
புதனை ஆட்சி நாயகனாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
செவ்வாய், சனி மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். சுக்கிரன் ஆக. 24ல் வக்கிரம் அடைவதால் நன்மை வழங்குவார். பொருளாதார வளம் இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். ஆக. 24 க்கு பிறகு பண வரவு இருக்கும். உறவினர் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும். பெண்களால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி அடையும். சேமிக்கும் விதத்தில் பொருளாதாரம் சிறக்கும். தொழிலாளர் ஆதரவு சீராக கிடைக்கும். பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழிலில் அமோக லாபம் உண்டாகும்.
பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கை எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. பணி விஷயமாக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர்.
அரசியல்வாதிகள் முன்னேற்றமான பலன் காணலாம். தொண்டர்களின் ஆதரவு மனதிற்கு தைரியத்தை வரவழைக்கும்.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. பெற்றோர் வழிகாட்டுதலை ஏற்பது அவசியம்.
விவசாயிகள் வருமானம் காண்பர். எள், கரும்பு, கோதுமை, பழவகை பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். ஆக. 21க்கு பிறகு அண்டை வீட்டார் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம்.பணிக்குச் செல்லும்
பெண்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.