Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கோயிலில் 23 வருடங்களுக்கு ... ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை காட்சி! ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதர்ஷ் ஸ்மார்க் திட்டத்தில் மாமல்லபுரம், தஞ்சை கோவில்!
எழுத்தின் அளவு:
ஆதர்ஷ் ஸ்மார்க் திட்டத்தில் மாமல்லபுரம், தஞ்சை கோவில்!

பதிவு செய்த நாள்

26 ஆக
2015
11:08

சென்னை: புராதன சின்னங்களை புனரமைக்க, மத்திய அரசு அறிவித்துள்ள, ஆதர்ஷ் ஸ்மார்க் திட்டத்தில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சேர்க்கப்பட்டுள்ளது. புராதன சின்னங்கள்:மத்திய கலாசார துறையின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, நாடு முழுவதும் உள்ள, 3,680 புராதன சின்னங்களை பாதுகாக்கிறது; அவ்வப்போது அவற்றை புனரமைக்கிறது. சுற்றுலா பயணிகள், புராதன சின்னங்களை பார்வையிடவும், அவை குறித்த தகவல்களை அறியவும், பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில், புராதன சின்னங்களை புனரமைக்க, ஆதர்ஷ் ஸ்மார்க் என்ற திட்டத்தை, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதில், முதல் கட்டமாக, தாஜ்மகால், டில்லி செங்கோட்டை, ஹுமாயூன் கல்லறை உட்பட, 25 புராதன சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் போன்றவை, இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் லுார்துசாமி கூறியதாவது:ஆதர்ஷ் ஸ்மார்க் எனப்படும், மாதிரி நினைவுச் சின்னம் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 25 புராதன சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தின் இரண்டு கோவில்கள் இடம் பெற்றுள்ளன.

இத்திட்டப்படி, கோவிலின் வரைபடம், தற்போதைய நிலையில் தயாரிக்கப்பட்டு, சிதைவுள்ள பகுதிகளை புனரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், கோவிலின் பாரம்பரியம் குறித்த தகவல் பலகை, சுற்றுலா பயணிகள் அமர்ந்து பார்வையிடுவதற்கான வசதி, சுற்றி வருவதற்கான நடைபாதை, வை - பை வசதி, குடிநீர், கழிப்பறை வசதி, கோவில் குறித்த ஐந்து நிமிட ஒளிப்பட காட்சி, சிறிய நவீன உணவகம் போன்றவையும் அமைக்கப்படும். தொல்லியல் துறை:தற்போது, கோவில்களின் வரைபடம் தயாரிக்கப்பட்டு, தொல்லியல் துறை தலைமையிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் பணி துவக்கப்படும். மாமல்லபுரம் கடற்கரை கோவிலில், கடல் காற்று, கடல் மண் படிவதால் அரிப்பு ஏற்பட்டு, சிற்பங்களில் சிதைவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்க, இத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar