Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை ... விஸ்வேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா! விஸ்வேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமித் ஷா சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமித் ஷா சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2015
11:08

சிதம்பரம்: பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று காலை, 10:30 மணிக்கு, கடலுார் மாவட்டம், சிதம்பரத்திற்கு வந்த அமித் ஷாவை, தமிழக பா.ஜ., செயலர் ஆதவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். பின், பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலுக்குச் சென்று, அமித் ஷா, சுவாமி தரிசனம் செய்தார். கோவில் பொது தீட்சிதர் செயலர் சர்வேஸ்வர தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர் தலைமையில், பொது தீட்சிதர்கள், பூர்ண கும்ப மரியாதையுடன், அமித் ஷாவை வரவேற்றனர். நடராஜர் சன்னிதியில், கனகசபை பஞ்சாட்சர படியில் நின்று, அமித் ஷா, சுவாமி தரிசனம் செய்தார். அமித் ஷாவுடன், அகில இந்திய பா.ஜ., பொதுச்செயலர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வந்தனர்.

அமித் ஷா வருகையையொட்டி, காலை, 10:00 மணி முதல், வெளியூர் பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால், அவர்கள் கடும் அவதிபட்டனர். போலீஸ் உத்தரவுப்படி, நான்கு சன்னிதி வீதிகளிலும், 12:00 மணி வரை, கடைகள் மூடப்பட்டன. எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கார் மாயமானதால் பரபரப்பு அமித் ஷா, நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து, அருகில் உள்ள நந்தனார் மடத்திற்கு காரில் புறப்பட்டார். கார், வடக்கு மெயின்சாலையை கடந்து, கடலுார் நோக்கிச் சென்றது. இதை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பின், அமித் ஷா, அவர் தங்கிஇருந்த ஓட்டலுக்கும் செல்லவில்லை; நந்தனார் மடத்திற்கும் செல்லவில்லை என அறிந்ததும், போலீசார் அதிர்ச்சிஅடைந்து, அமித் ஷா காரை தேடத் துவங்கினர்.

இதற்கிடையே, அமித் ஷா சென்ற கார், வண்டிகேட் நோக்கிச் சென்றது. கடலுார் பை-பாஸ் சாலையில், பொதுச் செயலர் முரளிதரராவ், முந்திச்சென்று, அமித் ஷாவிடம், நந்தனார் மடத்திற்குச் செல்ல, ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என கூறியுள்ளார்.அதன்பின், காரை திருப்பி, மணலுார் வழியாக, பை-பாஸ் சாலையை அடைந்து, நந்தனார் மடத்திற்கு சென்றனர். இந்த குளறுபடிக்கு காரணம், அமித் ஷா காருக்கு முன்னால் சென்ற பைலட் கார் டிரைவருக்கு, நந்தனார் மடத்திற்குச் செல்லும் வழி தெரியாமல், நேராக கடலுார் நோக்கிச் சென்றது தெரியவந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar