சென்னை: தஞ்சை மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் கோபுரங்களுக்கு புதிய கலசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளனசுவாமிமலை கோவிலில், செப்டம்பர் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதற்கான திருப்பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. மலேசியாவைச் சேர்ந்த பக்தர், டத்தோ ராஜசேகரன் குடும்பத்தினர், எட்டு லட்சம் ரூபாய் செலவில் கோவில் கோபுரங்களுக்கு புதிய கலசங்கள் செய்து தர முன்வந்தனர். ராஜகோபுரத்துக்கு ஏழு கலசங்கள், மூன்றரை அடி உயரத்திலும்; சுவாமி, அம்பாள் மற்றும் பாலசுப்பிரமணியர் சன்னிதி கோபுரங்களுக்கு, மூன்றேகால் அடி உயரத்திலும் மொத்தம், 10 தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. கலசங்கள் அனைத்தும் கும்பகோணம் அங்காளம்மன் சிற்பக் கூடத்தில் கடந்த, மூன்று மாதங்களாக வடிவமைக்கப்பட்டன. பணிகள் முடிந்து, வசந்த மண்டபத்தில் கோபுர கலசங்கள் வைக்கப்பட்டுஉள்ளன. செப்., 8ம் தேதி கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, 9ம் தேதி புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும்.