பதிவு செய்த நாள்
27
ஆக
2015
11:08
திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், முதல்கட்ட கும்பாபிஷேகம், செப்., 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, யாக சாலைகள் அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, 2001ல், கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, 2014ல், 10 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி, பணிகளை துவக்கியது. பணிகள் முடிந்ததை அடுத்து, முதல் கட்டமாக, கோவிலில் உள்ள, 43 உபசன்னதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு, செப்., 9ம் தேதி அதிகாலை, 5:40 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, செப்., 7ல் இருந்து, யாக சாலை பூஜைகள் நடக்கின்றன. இதற்காக, ஆயிரம் கால் மண்டபத்தில், யாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இரண்டாம் கட்டமாக, கோவில் ராஜகோபுரம் உட்பட, 10 கோபுரங்கள், பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட, முக்கிய சன்னதிகளுக்கு, அக்டோபரில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிகிறது. அதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை.