பதிவு செய்த நாள்
27
ஆக
2015
03:08
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழையூர்,பூர்வரங்கநாயகி தாயார் ஸமேத பூர்வரங்கநாதப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழையூரில் 9 ம் நுõற்றாண்டில் கட்டப்பட்ட பூர்வரங்கநாயகி தாயார் ஸமேத பூர்வரங்கநாதப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சந்திரநதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷிக்கு,பரந்தாமன் காட்சி கொடுத்த இடத்தில் புராதன மாடக்கோவிலாக கட்டப்பட்ட பழமையான இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 23 ம் தேதி விஷ்வக்ஸேனர் திருமஞ்சம்,கிராம பரிவார தேவதைகள் திருமஞ்சனத்துடன் துவங்கியது. தொடர்ந்து பூர்ணாஹூதி, அதிவாஸ,அஷிமோசன,மகாசாந்தி ஹோமம்,கோ பூஜைகள் நடந்தன. நாள்தோறும் வேதபாராயணங்கள்,திவ்யபிரபந்த பாராயணங்கள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை மகாசாந்திஹோமம், கஜ,,கன்யா, ஸீவாஸினி,தீப பூஜைகள் நடந்தன,பூர்ணாஹூதி,திருவாராதனம் நிகழ்சிகள் நடந்தன. காலை யாத்ரா தானம்,யாகசாலையில் இருந்து கட ங்கள் புறப்பாடு,கோவில் வலம் வருதல் நிகழ்ச்சிக்கு பின் மூலவர் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முரளிதரன் பட்டாச்சாரியார், ஸௌம்ய நாராயண பட்டாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.