தஞ்சாவூர் பெரிய கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2015 12:08
தஞ்சாவூர்: பிரதோஷ வேளையின் போது சிவன் நந்தயின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடுவதாக ஐதீகம். இதனடிப்படையில் தான் சிவாலயங்களில் நந்திக்கு பலவித அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தீஸ்வரருக்கு பால், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.