ஆதிசங்கரர் கைலாயம் சென்று சிவ பார்வதியைத் தரிசனம் செய்தார். அப்போது சிவன், ஐந்து சிவலிங்கங்களையும், ஒரு சுவடிக்கட்டையும் கொடுத்தார். லிங்கங்களை ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்த சங்கரர், சுவடியில் இருந்த நுõறு ஸ்லோகங்களைப் படித்தார். அவையே லலிதா சகஸ்ரநாமம். பக்தனின் நிலையில் இருந்து சிவபெருமானே தேவியைப்பாடியது இந்த நுõல். சங்கரர் சுவடியைப் பெற்றுத் திரும்பும்போது, நந்தி÷ கஸ்ரர் அந்த சுவடியைப் பிடித்து இழுத்ததில் 41 ஸ்லோகம் மட்டும் இருந்தது. மீதி 59 ஸ்லோகம் அவர் கைக்குச் சென்று விட்டது. அதனால், பின்னால் இடம்பெற்றிருக்கும் 59 ஸ்லோகம் மட்டுமே ஆதிசங்கரரால் பாடப்பட்டது. ஒரே நுõல் என்றாலும், முதல் 41 ஸ்லோகத்திற்கு ஆனந்தலஹரி என்றும், மீதி சவுந்தர்யலஹரி என்றும் பெயராகும்.