ஊழிற் பெருவலி யாவுள என்று திருவள்ளுவரும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று இளங்கோவடிகளும் ஊழின் வலிமையைக் குறிப்பி ட்டுள்ளனர். முன்வினைப் பயனை விட வலிமையானது வேறில்லை. அது அவரவரை மட்டுமல்ல! அவரது வம்சத்தையும் சாரும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவர் முற்பிறவியில் செய்த நன்மை, தீமைக்கான பாவபுண்ணியத்தை அடைந்தாக வேண்டும் என்னும் கர்மவினைக் கோட்பாட்டை இந்தியச் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை ஏற்காவிட்டாலும் மனமறிந்து நாம் பாவம் செய்வது கூடாது என்பதை எல்லா மத ங்களும் ஒத்துக் கொள்கின்றன.