பதிவு செய்த நாள்
29
ஆக
2015
11:08
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், வரலட்சுமி விரதம் நடந்தது. ஆந்திர மாநிலம், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில், ஆண்டுதோறும், வரலட்சுமி விரதத்தன்று, ‘சமஸ்டி’ என்ற, கூட்டு பிரார்த்தனை நடப்பது வழஙக்கம். அதன்படி, நேற்று, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக, கோவிலில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், தங்க தாமரை பீடத்தில், பத்மாவதி தாயாரை எழுந்தருள செய்து, அர்ச்சகர்கள் விரதத்தை அனுஷ்டித்தனர். வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, மாலை, 6:00 மணிக்கு, தங்க தேரில், பத்மாவதி தாயார் மாடவீதியில் வலம் வந்தார்.