காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது.காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில், 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக் கோவில் வளாகத்தில் உள்ள துாப்புல் வேதாந்த தேசிகன் கோவில் உற்சவத்திற்காக, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்யும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. அனைத்து பணிகளும் முடிந்து, நேற்று, வெள்ளிக்கிழமை அதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.நேற்று, காலை 6:30 மணியளவில், விளக்கொளி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள், புதிய தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். சின்ன காஞ்சிபுரம் டி.கே. நம்பி தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதி சுற்றி வந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தது.