அரிசி மாவில் கோலமிடுவதே அந்தக் கால வழக்கம். எறும்பு போன்ற எளிய உயிர்களுக்கு உணவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் இதனைச்செய்தனர். பிற்காலத்தில் சுண்ணாம்புக்கல்லை பொடியாக்கி கோலமிடுவதாக மாறியது. மஞ்சள், குங்குமம் வைப்பதும் இப்போது சேர்ந்து கொண்டது. இதற்கும் சாஸ்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை. மஞ்சள், குங்குமம் லட்சுமிகரமானவை. இதை கோலத்தில் வைக்கக் கூடாது. பலரது கால்பட வாய்ப்புண்டு.