விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு மகாலட்சுமி குபேரன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வைபவம் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, மாலை 7:00 மணிக்கு தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், குபேர மூல மந்திரம் நடந்தது. பின், விஷ்ணு பாராயினம் செய்யப்பட்டு, தாயார் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அ ருள்பாலித்தார். இதேபோன்று, கடந்த 28ம் தேதி நடந்த வரலட்சுமி நோண்பு நிகழ்ச்சியில் தாயார் வரலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார்.