பதிவு செய்த நாள்
01
செப்
2015
11:09
புதுச்சேரி: ஸ்ரீராகவேந்திரா பக்தர்கள் சபா சார்பில், ராகவேந்திரர் சுவாமியின் ஜீவன் முக்தி ஆராதனை விழா, முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு, சுதர்சன யாகத்துடன் விழா துவக்கியது. ராகவேந்திரர், பிரகலாதர், லட்சுமிநரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை, சபா தலைவர் திருக்காமு, துணைத் தலைவர் பூஷணமூர்த்தி, செயலாளர் உத்தரவேல், பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.