சிதம்பரம்: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 28வது ஆண்டு ஆராதனை விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராகவேந்திரர் பிறந்த இடமான சிதம்பரம் அடுத்த புவனகிரியில் அமைந்துள்ள ராகவேந்திரர் சுவாமிகள் ஆராதனை விழா கடந்த 30ம் தேதி துவங்கியது. முதல் நாள் பூர்வ ஆராதனையும்; காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. 31ம் தேதி ராகவேந்திரருக்கு புண்ணிய தின ஆராதனை நடந்தது. பின்னர் மாலை ராகவேந்திரர் வீதியுலா நடந்தது. 3ம் நாள் விழாவான நேற்று (1ம் தேதி) உத்தர ஆராதனையும்; காலை 9:00 மணிக்கு ராகவேந்திரருக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு தீபாராதனையும், பக்திப் பாடல்கள் இன்னிசை, நாதஸ்வர கச்சேரி, பஜனை வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை மகான் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளைத் தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், கதிர்வேல் அர்ச்சகர்கள் நரசிம்ம ஆச்சாரியார், ரகு ஆச்சாரியார் செய்திருந்தனர்.