பதிவு செய்த நாள்
02
செப்
2015
11:09
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், பிரதிஷ்டை செய்வதற்காக, 5,100 சிலைகளின், தயாரிப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்து முன்னணி சார்பில், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 17 முதல் 21ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை, கொடுவாய், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஆகிய இடங்களில், கல்மாவு மற்றும் காகிதக்கூழால், வடிமைக்கப்பட்ட, விநாயகர் சிலைகள், தயாரிக்கப்பட்டு வருகின்றன. காளிங்கநர்த்தனம், சிவபார்வதி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், கருட விநாயகர், முருக விநாயகர் உள்ளிட்ட, 60 வடிவமைப்பு களில், சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நடப் பாண்டில், 5,100 விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகம். வரும், 18ல் துவங்கி, 21ம் தேதி வரை மூன்று மாவட்டங்களிலும் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. அதன்பின், அனுமதி பெற்ற நீர் நிலைகளில் சிலைகள் கரைக்கப்படவுள்ளன. இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கிஷோர்குமார் கூறுகையில், “சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், விநாயகர் சி லைகள், வடிமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், மொத்தம் 68 இடங்களில், விநா யகர் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படும், என்றார்.