பதிவு செய்த நாள்
03
செப்
2015
11:09
கோவை: செப்.,5ல் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கடைவீதிகளில் கிருஷ்ணர் சிலைகளின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. புல்லாங்குழலோடு கிருஷ்ணர், குழந்தை பருவ கிருஷ்ணர், வெண்ணையோடு கிருஷ்ணர், யசோதாவோடு நிற்கும் கிருஷ்ணர் என, கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் கிருஷ்ணர் சிலலைகள் புதிதாக சந்தைக்கு வந்துள்ளன. டவுன்ஹால் காதி பவனில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள, பிளாஸ்டர் ஆப் பாரிஸில் உருவான கிருஷ்ணர் சிலைகள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக, மேலாளர் சகாயராஜ் தெரிவித்தார். பஞ்சலோகம், பித்தளை, கருப்பு மற்றும் வெள்ளை உலோகத்தில் உருவாக்கப்பட்ட கிருஷ்ணர், எடை குறைவாக வாங்க காகிதக்கூழ் கொண்டு உருவான கிருஷ்ணர் சிலைகள், களிமண்ணில் மிளிரும் கிருஷ்ணர், பட்டசித்ரா ஓவியங்கள், 150 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரையிலான கலைபொருட்கள், பூம்புகார் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஜோத்பூரிலிருந்து, முதல்முறையாக, துணிகளால் வடிவமைக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதாக, மேலாளர் போஸ் கூறினார்.