கொண்டல் குமார சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2015 11:09
நாகை: சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையானதும், ஸ்ரீ குமார சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கீழ்பழனி என்றழைக்கப்படும் இந்த தலத்தில் முருக பெரு மான் வள்ளி,தெய்வானையுடன் திருமணகோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இத்தலத்திற்கு வந்து குமாரசுப்பிரமணிய சுவாமியை தரிசித்தால் திருமண பாக்கியம் கிடைக்கும். இத்தகைய சிறப்புவாய்ந்த கோயிலின் திருப்பணிகள் காத்திருப்பு பம்பந்தம் தலைமையிலான பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கிராம மக்களின் பங்களிப் புடன் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 31 ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. இன்று காலை நான்காம் காலயாக சாலை பூஜைகள்முடிந்து பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைசெய்யப்பட்டது. பின்னர் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஸ்ரீ குமார சுப்பிரமணிய சுவாமி சன்னதி விமானத்தை அடைந்தது. தொடர்ந்து ஸர்வ சாதகம் வைத்தியநாத சிவாச்சாரியார் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.