நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த எழுமேடு பச்சை வாழி யம்மன் கோவிலில் கும்பா பிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி விக்னேஸ் வரபூஜையுடன் துவங்கியது. 1ம் தேதி காலை ஸ்ரீசுத்த உத்தமபட்ச யாகசாலை, ரக்ஷாபந்தனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசமும், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 2ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண் டாம் கால யாகசாலை பூஜை யும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து நேற்று (3ம் தேதி) காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், அதனைத் தொடர்ந்து 8:00 மணிமேல் 9:30 மணிக்குள் விநாயகர், கிராம தேவதைகள், கெங்கையம்மன், மாரியம்மன், ஐயனார் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 11:00 மணிக்கு பச்சை வாழியம்மன், ராஜ கோபுரம், மூலவர் சுவாமிகள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.