பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
விழுப்புரம்: விழுப்புரத்தில் குருராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழுப்புரம் ரங்கநாதர் ரோடு வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ வித்யா விநாயகர், ஸ்ரீ வித்யா சரஸ்வதி, ஸ்ரீ குருராகவேந்திரர் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி மாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், முதல் காலம் பூஜைகளும் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் காலம் பூஜை, மஹா பூர்ணாஹூதியும், காலை 8:30 மணிக்கு சந்திரசேகர் சிவாச்சாரியார் தலைமையில், கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் வி.ஆர்.பி., கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் வேலாயுதம், மைதிலி, பாண்டியன், மைதிலி, சோழன், ரோகினி மற்றும் எம்.எல்.ஏ., வெங்கடேசன், வழக்கறிஞர்கள் நாகராஜன், தேவேந்திரன், நடராஜன், சரஸ்வதி, உதயம் கன்ஸ்ட்ரக்ஷன் பிரகாஷ், பூக்கடை கணேசன், சுட்டீஸ் பார்க் பள்ளி நிர்வாகி கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியர் கந்தசாமி, நகர காங்., தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.