கோவிந்தா என்ற சொல்லுக்கு போனது வராது என்று அர்த்தம் இருப்பதாக சொல்கிறார்கள். கோவிந்தாவுக்கு இன்னொரு பொருளும் உண்டு இதை கோ இந்தா என்பர் கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக் கொள் என்று பொருளும் உண்டு. கோவிந்தா.. கோவிந்தா என சொல்லச் சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்று சொல்கிறார்கள்.