Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஸ்ரீவாரி ... விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் மூலவருக்கு ராஜ அலங்காரம்! விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கல்பட்டு நரசிம்ம பெருமாளுக்கு ரூ.1 கோடியில் ராஜகோபுரம்!
எழுத்தின் அளவு:
செங்கல்பட்டு நரசிம்ம பெருமாளுக்கு ரூ.1 கோடியில் ராஜகோபுரம்!

பதிவு செய்த நாள்

03 அக்
2015
11:10

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உள்ள, நரசிம்ம பெருமாள் கோவிலில், தொல்லியல் துறை வல்லுனர்களின் அறிவுரைப்படி, 1 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் திருப்பணிகள் துவங்கி உள்ளன.

அரிய கோலம்: செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள, பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், பல்லவர் கால குடைவரை கோவிலாகும். இது, இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர், வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி, சங்கு, சக்கரத்தை ஏந்திய நிலையில் உள்ளார்.
வலது கையை அபயகரமாகவும், இடது கையை, தொடை மீது வைத்த நிலையிலும், நெற்றிக்கண் கொண்டு, கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.

ஓராண்டிற்குள்... இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில், ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. எனவே, ராஜகோபுரம் கட்டித் தரக்கோரி, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக முதல்வரிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், முதலியாண்டான் சுவாமிகளின் தாசரதி டிரஸ்ட் மூலம், 1 கோடி ரூபாயில் ராஜ கோபுரம் கட்டித்தர முன் வந்தனர். இதையடுத்து, தொல்லியல் துறை வல்லுனர் நரசிம்மன் அறிவுரைப்படி, கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கட்ட, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 16ம் தேதி, பூமி பூஜையுடன், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் திருப்பணிகள், திருவாரூர் ஸ்தபதி முத்துக்குமார் தலைமையில், துவங்கி உள்ளன. இப்பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என, இந்து சமயஅறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோபுரத்தின் அமைப்பு: ராஜகோபுரம், 18 அடி அகலம், 27 அடி நீளம், 62 அடி உயரத்தில், ஐந்து நிலைகள் கொண்டதாக கட்டப்படுகிறது. கோபுரத்தில், அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar