விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் மூலவருக்கு ராஜ அலங்காரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2015 12:10
விழுப்புரம்: கிருத்திகையை முன்னிட்டு விழுப்புரம் பாலமுருகன் சுவாமி ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு பாலமுருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழாவை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில், மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.