பதிவு செய்த நாள்
03
அக்
2015
12:10
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள, குரு கோவில்களில், தட்சிணாமூர்த்திக்கு, பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான 2.10.15 முன்தினம் காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதேபோல், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ-விஷ்ணு கோவில்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் நடந்தன.
மேலும், மணவாளநகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.